சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, வடபழனி ஃபோரம் மாலில் (Forum Mall) 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், தேர்தல் தொடர்பான வினாடி வினா போட்டி மற்றும் திடீர் குழு நடனம் (Flashmob) மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூர் காவல் நிலையம் அருகில் வாக்காளர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (04.04.2026) ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 53,720/- ரொக்கப் பணம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட 3 விழிப்புணர்வுப் பேருந்துகள் (Model Vote Booth Bus) இன்று (04.04.2026) தொடங்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத்தை விடுவிக்கக் கோரி 88 மேல்முறையீடுகள் பெறப்பட்டு, இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 79 மேல்முறையீடுகளில் ரூ.1,31,10,498/- விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று (03.04.2026) சென்னை மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3,93,300/- ரொக்கப் பணம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இம்மைதானத்தின் பகுதிகளில் "என் வாக்கு, என் உரிமை நாம் அனைவரும் வாக்களிப்போம், தேர்தல் நாள் : ஏப்ரல் 23" என்ற வாசகங்களுடன் கூடிய விளம்பரப் பலகை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இன்று (02.04.2026) கொண்டு செல்லப்பட்ட ரூ. 70,69,824/- மதிப்பிலான 516.8 கிராம் தங்கம் நிலையான கண்காணிப்புக்குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (02.04.2026) வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் விவரம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, தண்டையார்பேட்டை, பார்வையற்றோருக்கான தமிழ்நாடு சங்கத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடு உணர்வு மூலம் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வியாசர்பாடி, செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர் ஆகியோருக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஆவணங்கள் இன்றி இன்று (31.03.2026) கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,91,75,000/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 100 மின்னணு விளம்பரப் பலகைகள் மற்றும் 1000 பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஆவணங்கள் இன்றி இன்று (30.03.2026) கொண்டு செல்லப்பட்ட ரூ. 77,000/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (30.03.2026) வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் விவரம்
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத்தை விடுவிக்கக் கோரி 62 மேல்முறையீடுகள் பெறப்பட்டு, இதுவரை உரிய ஆணவங்கள் சமர்ப்பித்த 45 மேல்முறையீடுகளில் ரூ.80,30,713/- விடுவிக்கப்பட்டுள்ளது
இந்திய தேர்தல் ஆணையத்தின் Suvidha செயலி மூலம் இன்று (30.03.2026) வரை 1157 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 724 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.