அடையாறு மண்டலத்தில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (11.07.2026) 138 இடங்களிலிருந்து 32.33 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான இரவு நேர காப்பகங்கள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சென்ட்ரல் இரயில் நிலையப் பகுதியில் 10.07.2026 அன்று விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடியிருப்பு கட்டடத்திற்கான திட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டடங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் தொடர் நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட பொதுமக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்வழிக்கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 100 சென்னை பள்ளிகளுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முக செயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரங்களை (Multi Functional Printer) மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், இன்று வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் சென்னை அடையாறு, கீழ்பாக்கம், சென்னை தெற்கு மண்டலம், புனித தோமையார் மலை, பூக்கடை, தியாகராய நகர் மற்றும் அன்ணாநகர் காவல் நிலைய பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 2,243 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணாநகர் மண்டலத்தில் போகன்வில்லா பூங்காவினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, வார்டு-126க்குட்பட்ட 4ஆவது ட்ரஸ்ட் லிங்க் தெருவில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தினை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மத்திய வட்டாரத்திற்குட்பட்ட மண்டலங்களில் உள்ள பொது இடங்களில் அனுமதியின்றி குப்பைகள் கொட்டுதல், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொட்டுதல், திடக்கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக நேற்று (06.07.2026) ஒரு நாள் மட்டும் ரூ.8.22 இலட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.