இன்று (09.04.2026) சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,51,750/- ரொக்கப் பணம் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ௲ 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட எண்.20 ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.பவன் லால் மீனா, இ.வ.ப., (Mr. Bhavan Lal Meena, I.R.S.,) (கைபேசி எண். 89258 19472) அவர்களை, தினசரி, காலை 9 மணி முதல் 10 மணி வரை அறை எண்.306, 2வது தளம், தமிழ்நாடு அரசினர் விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 002 என்ற முகவரியிலும்,
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத்தை விடுவிக்கக் கோரி 113 மேல்முறையீடுகள் பெறப்பட்டு, இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 98 மேல்முறையீடுகளில் ரூ.1,66,75,283/- விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 06.04.2026 வரையிலான வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
சென்னை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டிலேயே வாக்களிப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இரண்டாம் கட்டமாக, கணினி குலுக்கல் முறையில் 16 சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
இன்று (07.04.2026) சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.59,41,550/- ரொக்கப் பணம் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர்களுக்கு சைகை மொழி வாயிலாக தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று (06.04.2026) சென்னை மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11,61,100/- ரொக்கப் பணம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (05.04.2026) ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 80,000/- ரொக்கப் பணம் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, வடபழனி ஃபோரம் மாலில் (Forum Mall) 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், தேர்தல் தொடர்பான வினாடி வினா போட்டி மற்றும் திடீர் குழு நடனம் (Flashmob) மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூர் காவல் நிலையம் அருகில் வாக்காளர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (04.04.2026) ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 53,720/- ரொக்கப் பணம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட 3 விழிப்புணர்வுப் பேருந்துகள் (Model Vote Booth Bus) இன்று (04.04.2026) தொடங்கப்பட்டது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத்தை விடுவிக்கக் கோரி 88 மேல்முறையீடுகள் பெறப்பட்டு, இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 79 மேல்முறையீடுகளில் ரூ.1,31,10,498/- விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று (03.04.2026) சென்னை மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3,93,300/- ரொக்கப் பணம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இம்மைதானத்தின் பகுதிகளில் "என் வாக்கு, என் உரிமை நாம் அனைவரும் வாக்களிப்போம், தேர்தல் நாள் : ஏப்ரல் 23" என்ற வாசகங்களுடன் கூடிய விளம்பரப் பலகை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.