பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2024-25ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு நிகழ்நிலையில் (Online System) அனுமதி வழங்கும் நடவடிக்கை இன்று (21.05.2025) முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The issuance of licences for the erection of hoardings are being issued by Greater Chennai Corporation in GCC limits. Previously, applications were received, processed and approvals granted through offline method.

தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கைலாசபுரம்-மயிலாப்பூர் இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் கிருஷ்ணாம்பேட்டை மயானபூமியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும் பொழுது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி இன்று (16.05.2025) மாநகராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் நடைபெற்றது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை பள்ளி கல்வி வளர்ச்சி நிதிக்காக இன்று வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 81 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும் பொழுது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நாளை (16.05.2025) மாநகராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் நடைபெற உள்ளது.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.40 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 88.12 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட அரும்பாக்கம் இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் அல்லது வேலங்காடு மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள், எம்.கே.பி. நகர், மத்திய நிழற்சாலையில் கட்டப்பட்டுள்ள சறுக்கு விளையாட்டு மைதானத்தினை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Guidelines for Clean and Safe Construction

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி, வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்யும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத் தீர்மானத்தின்படி தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக (TEXCO) நிறுவனத்தின் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டு 22.07.2024 முதல் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை பாராட்டி நல உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.35.40 இலட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணியினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, ரூ.6.58 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மணலி மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை மயானபூமியில் 250 நாட்டு மரக்கன்றுகள் நடும் பணியினைத் தொடங்கி வைத்து, மரக்கன்றினை நட்டார்.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 71வது வார்டு அலுவலகத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.