சென்னை மாநகராட்சி

வணக்கத்திற்குரிய மேயர்

சாதனைகள்

சாதனைகள்

சிறப்பு நடவடிக்கைகள்

  • மக்களை தேடி மாநகராட்சிஎன்ற சிறப்பு முகாம்கள் மூலம், ஓரே இடத்தில், ஓரே நேரத்தில் அனைத்துத் துறைகளின் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
  • பொது மக்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களை எளிதில் தொடர்பு கொள்ள இலவச கைபேசி (Cell)வழங்கப்பட்டுள்ளது.
  • தசைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சிறப்பு பள்ளி துவக்கப்பட்டுள்ளது.
  •  சாலையோரங்களில் தங்கி வாழும் குழந்தைகளுக்காக இரவில் பாதுகாப்பாகத் தங்கி துயில் கொள்வதற்காக இரவு நேர காப்பகம் (Night Shelter) உருவாக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகர எல்லைக்குள் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஒர்  மரக் கன்று நடுதல்”.மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து செந்தமிழில் பெயர் சுட்டப்படும் குழந்தைகளுக்குஒரு தங்க மோதிரம்பரிசு.
  • மூவலூர் இராமாமிர்த அம்மையார் நிதி உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.20,000/- திருமண நிதி உதவிடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000/- உதவி தொகை வழங்குதல்சென்னை மாநகராட்சியில் ஒளிவு மறைவற்ற ஒப்பங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க  எளிதில்  நினைவில் கொள்ள ஏதுவாக 1913 என்ற புதிய நான்கு இலக்க தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொது மக்கள் தங்கள் குறைகளை குறுந்தகவல் (SMS) சேவை மூலம் தெரிவித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிந்து கொள்ள 97899 51111 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • வாரம் ஒரு மண்டலத்திற்கு சென்று, வார்டு முழுவதும் இரவு தெரு விளக்குகளை ஆய்வு செய்து உடனடியாக நடிவடிக்கை
  • வேலை கேட்டு வந்த மனுக்களை பரிசீலித்து தனியார் நிறுவனங்களுக்கு சிபாரிசு செய்து 100 பேருக்கு வேலை அளிக்கப்பட்டது. 

நகரை அழகுபடுத்துதல்

  • சென்னை மாநகரை அழகுப்படுத்த மாநகரின் பல்வேறு இடங்களில் நவீனப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, பொலிவிழந்த பழைய பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  • மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தடைசெய்தல்
  • காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தை வண்ண ஒளி மற்றும் பிரத்யேக வடிவமைப்புடன் அழகுப்படுத்தி இரவு நேரத்தில் நேப்பியர் பாலம் அழகாக காட்சி அளிக்கும் வகையில் ஒளி அமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களில் 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, இரும்பு வலையிலான காப்பு கூடுகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.
  • சென்னை மாநகரின் அழகை வெளிப்படுத்த சென்னையில் விளம்பல பலகைகள் (Digital Banner) வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் அறிவிப்புகள் (Posters) ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சுகாதாரம் மற்றும் குடும்பநலம்

  • இணையதளத்தின் மூலம் சென்னை மாநகராட்சியில் பதிவாகியுள்ள பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கான சான்றிதழ்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் இலவசமாக எடுத்துக் கொள்ள (Download)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் முதன் முறையாக பிரேதங்களை பாதுகாக்க  இலவச குளிர்சாதனப் பெட்டி மற்றும்  மயானபூமிக்கு எடுத்து செல்ல இலவச ஊர்தி.  மேலும் மயானங்களில் பிரேதங்கள் புதைப்பதும், எரியூட்டுவதும் இலவசமாக்கப்பட்டுள்ளன.
  • மயான பூமிகளில் சமூக விரோத நடவடிக்கைகளை தவிர்க்க சுற்றுச்சுவர்,  எழிலூட்ட  புல்தரைகள்  அமைக்கப்பட்டுள்ளன. 
  • மயான பணியாளர்கள், மயான உதவியாளர் என்ற பதவியில் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மருத்துவ மனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புத்தாடை, டவல், சோப்பு, பவுடர் முதலியவை அடங்கிய பரிசுப்பை ஒன்று சென்னை மாநகராட்சியின் சார்பாக இலவசமாக வழங்கப்படு வருகின்றது.
  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பத்தை உறுதி செய்யவும், சீரான கருவளர்ச்சியைக் கண்காணிக்கவும், அபாய அறிகுறிகளை அறியவும் அல்ட்ரா சோனோகிராம் கருவிகள் அனைத்து நலவாழ்வு மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
  • மாநகராட்சி நலவாழ்வு நிலையங்களில் பதிவு செய்துகொள்ளும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக்கப்பட்டுள்ளது.
  • 8 மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவர்களை நியமித்து 24 மணி நேர மகப்பேறு சேவை வழங்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்ள்ளது.
  • பிறந்துள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய நாட்கள் நினைவுப்படுத்த தாய்மார்களுக்கு குறுந்தகவல் சேவை (S.M.S)  மூலம் அவர்களுடைய செல் போனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.
  • மாநகராட்சி நலவாழ்வு நிலையங்களில் பதிவு செய்துள்ள அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் எச்..வி பரிசோதனை செய்யப்படும். தாய் அல்லது தந்தைக்கும் H.I.V +veஎந இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் தக்க நடவடிக்கை மற்றும் மருந்து கொடுத்து H.I.V நோய் தொற்று பரவாமல் கண்காணிக்கப்படும்.
  • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 10 மகப்பேறு நிலையங்களிலுள்ள பிரசவ அறைகளுக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகராட்சி  மருத்துவமனைகளில் நடைபெறும் அனைத்து பிரசவங்களுக்கும் ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பிரசவ மருத்துவ சாதனங்கள் பயன்படுத்தப்படுவது. 
  • பெண்களைப் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் கருவி சோனோமேமோ கிராம் (Sono Mammogram) வட சென்னைக்கு ஒன்றும், தென் சென்னைக்கு ஒன்றும் வாங்கப்படும்.  இதனை இயக்குவதற்கு மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் 

கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்:

  • மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடிசைப்பகுதிகளுக்கும் அந்தந்த பகுதியிலுள்ள பொதுமக்களை ஈடுபடுத்தி கொசுக்களை கட்டுப்படுத்த சுய உதவி குழுவினருக்குச் சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் கொசுக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது.
  • சென்னையில் உள்ள கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் கட்டுமரங்கள், மற்றும் படகுகள் மூலம் கொசு உற்பத்தியை தடுக்க மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

 கல்வி

  •  12ம் வகுப்பில் முதன்மை பெற்று மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 
  • 12ம் வகுப்பில் பள்ளி முதன்மை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • 10ம் வகுப்பில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கல்விச் சுற்றுலா.
  • சென்னை மாநகராட்சியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு  பல் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு நோயினைக் கண்டறிந்து இலவசமாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.   
  •  6,7,8ஆம் வகுப்பு மாணவ/மாணவியர் ஆங்கில மொழியை எளிய நடையில் பேசி பழகிட ஏதுவாக அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் சிறந்த நிறுவனங்கள் மூலம் ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்படும்.
  • மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரில்,  இருதய நோயினால் பாதிக்கப்பட்ட,  பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரூ.50,000/- நிதியுதவி அளிக்கப்படுகிறது.
  • சென்னை மாநகராட்சிப் பெண்கள் பள்ளிகளில் பயின்று வரும் மாணவியர்களின் உடல் ஆரோக்கியம் காக்கும் வகையிலும் சுகாதாரம் பேணும் வகையிலும், மாணவியர்களுக்கு இலவசமாக சானிடரி நாப்கின்கள் (SANITARY NAPKINS) வழங்கப்படுகிறது.
  • இயலா குழந்தைகள் பேச்சு திறன் பயிற்சியும், உடல் வள நலப்பயிற்சியும் பெறுவதற்கு குழந்தைகளின் பெற்றோர் ஒருவருக்கும், குழந்தைகளுக்கும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள இலவச அனுமதிச் சீட்டு (Free Bus Pass)வழங்கப்படும். 
  • 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்க்கு அகராதி நூல் (Dictionary) இலவசமாக வழங்குதல்.
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.
  • பொதுதேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் நேரங்களில் பழரொட்டிகள் வழங்கப்படுகின்றன.
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாண்டிசோரி   கல்வி முறை 30 இலட்சம் செலவில் துவங்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டஒளிச்சுவடுஇதழ் வெளியிடல் 

வருவாய்

  • சொத்து வரி செலுத்துவோர் அவர்களது நிலுவைத் தொகை எவ்வளவு என்பதை (Online) இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளுவும், வரி நிலுவை தொகையினை இணையதளத்தின் மூலமாக செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 
  • சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் கைபேசி (Cell Phone)மூலமாகவும் சொத்து வரி செலுத்த வசதி.
  • பிளாக் பெரி, ஏர்டெல் கருவி (Black Berry Airtel Machine) மூலம் சொத்து வரி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்படும் 

மின் துறை

  •  9860 புதிய தெரு விளக்குகள் ரூ.1,282 இலட்சங்கள் செலவில் நிறுவப்பட்டுள்ளது 
  • ரூ.282 இலட்சங்கள் செலவில் 2183 எண்ணிக்கையில் பழைய துரு பிடித்த மின் கம்பங்களை அகற்றி புதிய தெரு மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
  • 372 கி.மீ. நீளத்திற்கு பழுதடைந்த மின் வடங்களை ரூ.768 இலட்சங்கள் செலவில் மாற்றி அமைத்துள்ளது.   
  • ரூ.39 இலட்சங்கள் செலவில் 4 ஹைட்ராலிக் ஏணி வண்டிகள் வாங்கப்பட்டுள்ளது. 
  • 60 எண்ணிக்கையில் சோலார் தெரு விளக்குகள் ரூ.11 இலட்சங்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
  •  சென்னையில் முக்கிய பகுதிகளில் ரூ.205 இலட்சங்கள் செலவில் 32 எண்ணிக்கையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • பழுதடைந்த சோடியம் ஆவி தெரு விளக்கு பிட்டிங்குகள் 3940 எண்ணிக்கையில் ரூ.62 இலட்சங்கள் செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  •  746 தெருவிளக்குகளுக்கு 82 இலட்சங்கள் செலவில் டைமர் சுவிட்சுகள் நிறுவப்பட்டுள்ளது.
  •  84 இலட்சங்கள் செலவில் 600 எண்ணிக்கையில் தானியங்கி விசைப்பான்கள் நிறுவப்பட்டுள்ளது.  

நடைபாதை பணிகள் 

  • 565 நடைபாதை பணிகள் 336.81 கி.மீ நீளத்தில் ரூ. 28.60 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலம் 

  • ரூ. 46.02 கோடி செலவில் 3 மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளது.  மேலும் 2 மேம்பாலங்கள் ரூ.70.93 கோடி செலவில் கட்டப்பட்டுவருகிறது. 
  • உயர்மட்ட மேம்பாலம் ரூ.6.03 கோடியில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  வாகனசுரங்கப்பாதை ரூ.4.33 கோடி செலவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
  •  இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே ரூ. 27.95 கோடி செலவில் 2 வாகன மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 
  • இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே ரூ. 30.24 கோடி செலவில் 3 வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.   மேலும் ஒரு வாகன சுரங்கப்பாதை ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது

சாலைகள் 

  • 791 கான்கிரீட் சாலைகள் 160.70 கி.மீ நீளத்தில் ரூ. 46.37 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.  
  • 549 கான்கிரீட் சாலைகள் 117.47 கி.மீ நீளத்தில் ரூ. 34 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  • 4127 உட்புறச் சாலைகள் 1128.87 கி.மீ. நீளத்தில் ரூ. 173.84 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

 திடக்கழிவு மேலாண்மை

  • குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையிலிருந்து உரம் மற்றும் மின்சாரம் தயாரித்தல், கற்கூளங்களைக் கொண்டு கட்டுமான செங்கற்கள் தயாரித்தல் மற்றும் எதற்கும் உதவாத கழிவுகளை மட்டும் களைய சுகாதார குப்பை கொட்டும் தளங்களை அமைத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • குடிசைப் பகுதி மக்களுக்குக் குப்பைகளைத் தரம் பிரிக்க இரண்டு வாளிகள் வழங்கும் திட்டம்
  • பிரமாண்டமான குப்பையை கொத்தாக பிடித்து தூக்கும் இயந்திர ஊர்திகள் (Grapplers), குப்பைகளை அழுத்தி எடுத்து செல்ல வாகனங்கள். 

மழைநீர் வடிகால்

  • சென்னை மாநகரில் மழைக் காலங்களில் மழை நீர்த்தேக்கம் என்ற பிரச்சனைக்குத் தீர்வுகாண ரூ. 1447.91 கோடி மதிப்பில் 16 கால்வாய்கள் மேம்படுத்தும் பணி
  • கோவில் குளங்களில், அதனை சுற்றி உள்ள மழை நீர் வடிகால்வாய்களை இணைத்தல்

விருதுகள்

  • சென்னை மாநகராட்சிக்கு இங்கிலாந்து நாட்டின் சர்வதேச தலைமை பண்பு நிறுவனம் உலக தலைமை பண்பிற்கான விருதினை (World Leadership Award) டனில் 06.12.07 வழங்கியது.
  • சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே Ôமுதன்மை மாநகராட்சியாக தேர்வு செய்து மாண்புமிகு பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் முன்னிலையில் மாண்புமிகு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. எஸ். ஜெயபால் ரெட்டி அவர்கள் விருதினை வழங்கினார்.
  • சென்னை மாநகராட்சி மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நடத்தப்பட்ட  மெகா மருத்துவ முகாம் மூலம் 60,478 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.  இது லிம்கா சாதனையில் இடம் பெற்றுள்ளது.
  • வணக்கத்திற்குரிய மேயர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மாநகராட்சியில் ஆற்றிய பணிகளை பாராட்டி Ôஅன்பு பாலம்என்ற அமைப்பு Ôசாதனையாளர்விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.
  • வில்லிவாக்கத்திலுள்ள நவீன ஆட்டிறைச்சி கூடம், சைதாப்பேட்டையிலுள்ள ஆட்டிறைச்சி கூடம் மற்றும் ரிச்சி தெருவிலுள்ள மின்பண்டககூடம் ஆகியவற்றின் சிறப்பான பாராமரிப்பிற்கு ISO 9001 : 2008 சான்றிதழ்.
  • குப்பை மூடி எடுத்துச் செல்வதற்கு 80 எண்ணிக்கையிலான மூடிய வாகனங்கள் ரூ.16 கோடி செலவில் விரைவில் வாங்கப்பட உள்ளது.
  • 2400 எண்ணிக்கையிலான மூடி பொருத்திய குப்பை தொட்டிகள் ரூ.2.68 கோடி செலவில் விரைவில் வாங்கப்பட உள்ளது.
  • குப்பை கொட்டும் வளாகங்களும் குப்பை மாற்று நிலையங்களும் ரூபாய் 7.82 கோடி செலவில் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
  • பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் சுற்றுச்சுவர் மற்றும் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.